• Tue. Aug 25th, 2026

24×7 Live News

Apdin News

‘சீனா மீது அணுகுண்டு வீச திட்டமிட்ட அமெரிக்க தளபதி’ – மூன்றாம் உலகப்போர் பற்றி அச்சமூட்டிய கொரிய போர்

Byadmin

Aug 25, 2026


கொரியப் போரில் அமெரிக்கா - சீனா வகித்த பங்கு என்ன? 3ம் உலகப்போர் குறித்த அச்சம் ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Keystone/Getty Images

படக்குறிப்பு, கொரியப் போரின்போது, ​​அமெரிக்க விமானப்படையின் B-29 சூப்பர்ஃபோர்ட்ரஸ் குண்டுகளை வீசுகிறது.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிபிசி ஒளிப்பதிவாளர் ஒருவர் பியாங்யோங் நகரின் வீழ்ச்சியைப் படம்பிடித்தார். கொரியப் போரில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் போர் கொரியத் தீபகற்பத்தையும் அதன் மக்களையும் எவ்வாறு சீரழித்தது, அப்பகுதியின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைத்தது, உலகை எவ்வாறு அணு ஆயுத அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றது என்பதை ‘இன் ஹிஸ்டரி’ (In History) நிகழ்ச்சி ஆராய்கிறது.

“நகரத்திலிருந்து வெளியே செல்லும் அனைத்து சாலைகளிலும் அகதிகள் கூட்டம் நிரம்பியிருந்தது. அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது மிகச் சிலருக்கே தெரிந்திருந்தது.”

1950ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, எரிந்துகொண்டிருந்த பியாங்யோங் நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அச்சமடைந்த வட கொரியர்களின் காட்சிகளை பிபிசி ஒளிபரப்பியது.

வட கொரியாவின் தலைநகரான பியாங்யோங் நகரில் தான் இருந்த இறுதி நேரங்களில் பிபிசி ஒளிப்பதிவாளர் சிரில் பேஜ் இந்தக் காட்சிகளைப் படம்பிடித்தார்.

ஐ.நா. படைகள் பின்வாங்குகின்றன என்றும், சீனப் படைகள் நெருங்கி வருகின்றன என்றும் செய்திகள் பரவிய நிலையில், நகரம் முழுவதும் பரவிய அச்சத்தையும் குழப்பத்தையும் கேமராவில் பதிவு செய்ய பேஜ் தெருக்களில் இறங்கினார்.

By admin