• Wed. Jul 1st, 2026

24×7 Live News

Apdin News

சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

Byadmin

Jul 1, 2026


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவடி, பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 2, 3, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில், ஆவடி மற்றும் பட்டாபிராம் இடையே ‘டவுன் பாஸ்ட் லைனில்’ இயக்கப்படும். இதனால் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது.

By admin