மோதல்:
பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி போராடிய வேலை தேடுபவர்கள் மீது காவல்துறையினர் நீர்ப்பீச்சிகள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை பயன்படுத்தியதால், நேற்று (திங்கள் கிழமை) ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே ஏற்பட்ட மோதலில் பல போராட்டக்காரர்களும் நான்கு காவலர்களும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பல தடுப்புகளை போராட்டக்காரர்கள் மீறியதை தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டது.
காவல்துறையின் நடவடிக்கையில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் (SP) பரஸ் ரானா தெரிவித்தார்.
ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) அல்லது ஜே.பி.எஸ்.சி. (JPSC) என எந்த அமைப்பாக இருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக வேலைகளை விற்பனை செய்வதிலேயே அவை ஈடுபட்டுள்ளன என்றும், அதே வேளையில் மாணவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி குற்றம் சாட்டினார்.