• Tue. Jun 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஜாவேத் அலி: ஏர் இந்தியா விமான விபத்தில் மகனை இழந்த தாயின் ஓராண்டு துயரம்

Byadmin

Jun 2, 2026


 ஜாவேத், அவரது மனைவி மரியம் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள்

பட மூலாதாரம், Imtiyaz Ali

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஏர் இந்தியா விமான விபத்தில் ஜாவேத், அவரது மனைவி மரியம் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்தனர்.

    • எழுதியவர், ஜோயா மதீன்
    • பதவி, மும்பை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இம்தியாஸ் அலியின் சகோதரர் ஜாவேத், அண்ணி மரியம் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் விமான விபத்தில் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன நிலையில், நாம் சந்திக்கலாமா என்று கேட்பதற்காக நான் அவரை அழைத்தபோது, முதலில் மும்பையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்தோம்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, தனது முடிவை மாற்றிக்கொண்ட அவர், “அதற்குப் பதிலாக நாம் ஹோட்டலில் சந்திக்கலாம்” என்றார்.

பின்னர், மும்பையிலுள்ள ஒரு ஹோட்டலின் மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்து, அதற்கான காரணத்தை அவர் விளக்கினார்.

ஜாவேத்தும் அவரது குடும்பத்தினரும் பிரிட்டனில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இம்தியாஸையும், குடும்பத்தினரையும் பார்ப்பதற்காக அடிக்கடி மும்பைக்கு வருவதுண்டு.

ஆனால் இந்த விபத்திற்குப் பிறகு, அந்த வீடு முன்பிருந்ததைப் போல இல்லை.

By admin