• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கல் உருவாகும், வாழைத்தண்டு சாறு அதை கரைக்கும் என்பது உண்மையா? மருத்துவர் விளக்கம்

Byadmin

Sep 5, 2026


தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகுமா? மருத்துவர் தரும் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சண்முகப்ரியா செல்வராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் என்றும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும் என்றும் மக்களிடையே சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன.

இவற்றில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது? மருத்துவர்கள் கூறுவது என்ன?

மனித உடலில் உள்ள இரு சிறுநீரகங்கள் முதுகெலும்பின் இருபுறம், வயிற்றின் பின்பகுதியில் அமைந்துள்ளன. அளவில் சிறிதாக இருந்தாலும் உடலின் கழிவு நீக்கும் முக்கிய அமைப்பாக இவை செயல்படுகின்றன.

உடலில் தேங்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுப் பொருட்களை சிறுநீரில் வடிகட்டி வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முதன்மைப் பணியாகும். சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் சிறுநீர், சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு சென்று, குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரகக் கற்கள் எதனால் உருவாகின்றன?

சிறுநீரில் வெளியேறும் கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்ற தாதுப் பொருட்கள் அதிகரிக்கும்போது, அவை படிமங்களாகி, படிப்படியாக ஒன்றிணைந்து கடினமான கல் வடிவம் பெறுகின்றன. இதுவே சிறுநீரகக் கல் எனப்படுகிறது. அரிதாக அம்மோனியம் மக்னீசியம் பாஸ்பேட் கற்களும் காணப்படுகின்றன.

By admin