• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

தடுப்பணை தூண்களில் குதித்து பள்ளி சென்ற மாணவர்கள் – வைரல் வீடியோவுக்கு பிறகு என்ன நடந்தது?

Byadmin

Aug 10, 2026


மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பணையின் தூண்களை தாண்டி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஆபத்தான முறையில் குதித்து கடக்கும் காணொளி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.

பட மூலாதாரம், Naved Jafri

    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தடுப்பணையின் தூண்களை தாண்டி பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஆபத்தான முறையில் குதித்து கடக்கும் காணொளி கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது.

பாலோஹ் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தடுப்பணையை கடக்கும் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை உடனடியாக நடவடிக்கையில் இறங்கின.

இதையடுத்து, தடுப்பணையில் இரும்பு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கிராமத்திலேயே 9 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வியை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேல்நிலைப் பள்ளிக் கல்விக்காக ஆற்றைக் கடக்க வேண்டியிருந்த மாணவர்களை அருகிலுள்ள பந்தேரா கிராம உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசி குழு இந்த கிராமத்துக்குச் சென்றபோது, கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக மாணவர்கள் இதேபோல் உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று வந்ததாக கிராம மக்களும் மாணவர்களும் தெரிவித்தனர்.

By admin