எக்ஸ் தளத்தில் பதிவு:
இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் அளிக்க முடியாதது பற்றி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் தனக்கு கிடைத்த வாழ்த்துக்களால் மிகவும் நெகிழ்ந்து போனதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவில் அவர், “இன்றும் கடந்த சில நாட்களாகவும், அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்த நல்வாழ்த்துக்களால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். ஒவ்வொரு செய்திக்கும் என்னால் தனித்தனியாகப் பதிலளிக்க முடியாமல் போனாலும், தெரிவிக்கப்பட்ட ஒவ்வொரு வாழ்த்தையும் நான் போற்றி மதிக்கிறேன்.
பாரதத்திற்குச் சேவை செய்யவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்குப் பங்களிக்கவும் கிடைத்த இந்த வாய்ப்பை நான் ஒரு பாக்கியமாக கருதுகிறேன். பல ஆண்டுகளாக, இந்திய மக்கள் ஸ்திரத்தன்மை, நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்காக மீண்டும் மீண்டும் வாக்களித்து வந்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது….” என குறிப்பிட்டுள்ளார்.