• Tue. Sep 15th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க 2 முக்கிய தளர்வுகள் – பலன் யாருக்கு?

Byadmin

Sep 15, 2026


தமிழ்நாடு, உயர்க்கல்வி துறை

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான நிலம் மற்றும் நிரந்தர வைப்புநிதி தொடர்பான விதிகளைத் தளர்த்தும் வகையில் சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழகங்களைத் தமிழ்நாட்டுக்கு ஈர்ப்பதற்காகவே இந்தத் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால், இந்தத் திருத்தம் உயர்கல்வியை மேலும் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் சமூகநீதியையும் பாதிக்கக்கூடும் என்றும் எதிர்க்கட்சிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் விமர்சித்துள்ளன.

அப்படியானால், இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையை மேம்படுத்துமா? அல்லது உயர்கல்வியை மேலும் வணிகமயமாக்குமா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்க குறைந்தது 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்பட்டது.

By admin