தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதையடுத்து, காங்கிரஸ் முதல் ஆளாக திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவிற்கு ஆதரவை வழங்கியது. காங்கிரஸ் இணைந்ததும் தவெக எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தங்களது ஆதரவை தவெகவிற்கு வழங்கின.
இன்று மாலை விசிக கட்சியும் தவெகவிற்கு தனது ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. இதன்மூலம் தவெகவின் கூட்டணி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் தனது ஆதரவு கடிதங்களுடன் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, நாளை மாலை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக வாய்ப்பு உள்ளது.