ஆத்தூர் தாலுகாவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி இந்த பஸ்சில் ஏறி திண்டுக்கல் வந்துள்ளார். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய மாணவியிடம் டிரைவர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் டிரைவர் சுரேசை போக்சோவில் கைது செய்தனர்.