திருமாவளவனின் இந்த பேச்சு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் கூறுகையில்,
குழப்பம் வேண்டாம்
அமைச்சரவையில் இடம்பெற்றாலே த.வெ.க. கூட்டணியில் விசிகவும் ஒரு பகுதி தான். கூட்டணி தொடர்பாக திருமாவளவன் வார்த்தைகளில் விளையாட வேண்டாம். குழப்பமும் வேண்டாம். ஆட்சிக்கு ஆதரவு தந்து உள்ளே வந்துவிட்ட பிறகு வேறு மாதிரி பேசுவதுவெட்டி வேலை என்றார்.
மேலும் மாணிக்கம் தாகூர் பேசுகையில், தவெக தலைமையில் நல்ல கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த ஆட்சியை சோபா மாடல் ஆட்சி என எதை சொன்னாலும் நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம் என்று கூறினார்.