• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

துபை: டிக்டாக் இன்ஃப்ளூயன்சர் ப்ரூக் ஜார்ஜ் கைது – என்ன நடந்தது?

Byadmin

Jun 28, 2026


டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் மீது தனது காதலனைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Detained in Dubai

படக்குறிப்பு, டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் மீது தனது காதலனைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது (கோப்புப் படம்)

    • எழுதியவர், கேத்தரின் இவான்ஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

துபையில் 23 வயதான டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் மீது தனது காதலனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரிட்டனின் கென்ட் பகுதியில் உள்ள கிரேவ்செண்ட்டைச் சேர்ந்த ப்ரூக் ஜார்ஜ் மீது தனது காதலனைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவருக்கும் ஆன்லைனில் அறிமுகம் ஏற்பட்டு, அதன் பிறகு அவர்கள் காதலிக்கத் தொடங்கினர். இந்தத் தகவலை ‘டிடெய்ன்ட் இன் துபை’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தனது காதலரின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காகத் தான் கத்தியை எடுத்ததாக ப்ரூக் கூறியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவரைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை குடும்ப வன்முறை வழக்காகப் பார்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வகையிலான மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

By admin