• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

தெலங்கானாவில் உலவிய டைனோசர்கள் – மஞ்சேரியல் மாவட்டத்தில் புதைபடிவ கால்தடங்கள் உணர்த்துவது என்ன?

Byadmin

Jun 12, 2026


தெலுங்கானாவில் உள்ள கோதாவரி-பிராணஹிதா படுகையில் ஏற்கனவே டைனோசர் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய ஆராய்ச்சி மூலம் அவற்றின் கால் தடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த புதைபடிவக் கால் தடங்கள் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.

    • எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

மிகப்பெரிய டைனோசர்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து சென்றுள்ளன. தெலுங்கானாவில் புதைபடிவக் கால் தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கன்னேபள்ளி மண்டலத்தின் சாலிகான் கிராமம், ஒரு அரிய வரலாற்று நிகழ்வின் தளமாக மாறியுள்ளது. இங்கு பெரிய டைனோசர்களுடன், குட்டி டைனோசர்களின் கால் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த புதைபடிவ கால் தடங்கள் சுண்ணாம்புப் பாறைப் படுக்கைகளில் இன்னும் தெளிவாகத் தெரிகின்றன.

தெலுங்கானாவில் உள்ள கோதாவரி-பிராணஹிதா படுகையில் ஏற்கனவே டைனோசர் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய ஆராய்ச்சி மூலம் அவற்றின் கால் தடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர்களின் கால் தடங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

By admin