• Sat. Jul 25th, 2026

24×7 Live News

Apdin News

நான் பதவி விலக போவதில்லை | அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் தெரிவிப்பு

Byadmin

Jul 25, 2026


தாம் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரவில்லை எனவும், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“என்னை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் குறிப்பிடவில்லை. ஊழல்வாதிகளும், பிணையில் உள்ளவர்களுமே நான் பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றனர். நான் பதவி விலகப் போவதில்லை. அதற்கான எந்தவொரு அவசியமும் கிடையாது” என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு அமைவாக தனது கடமைகளை நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த கருத்து, அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin