• Fri. May 29th, 2026

24×7 Live News

Apdin News

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?

Byadmin

May 29, 2026


நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தென்பட்ட வெள்ளைப் புலி ஒரு தனி புலி இனமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த வாரம் வெள்ளைப்புலி ஒன்று தென்பட்டுள்ளது. வெள்ளைப்புலி என்பது புலிகளில் அரிதான ஓர் இனமாக பொதுமக்களில் சிலர் தவறாக கருதுகின்றனர்.

மரபணு மாறுபாட்டால் ஏற்படும் நிற வேறுபாட்டின் வெளிப்பாடே இந்த வெள்ளைப்புலி என்கின்றனர் காட்டுயிர் ஆய்வாளர்கள்.

2017 ஆம் ஆண்டில் வனத்துறை கேமராவில் பதிவான வெள்ளைப்புலிகளில் ஒன்று, பல ஆண்டுகளுக்குப் பின்பு இங்கு மீண்டும் வந்திருக்கலாம் என்கிறார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் விஜயகுமார்.

வங்கப்புலிகளில் மரபணு மாறுபாட்டால் நிறவேறுபாடு அடைவதுதான் புலி வெள்ளையாக இருப்பதற்குக் காரணம் என்று விளக்கும் தமிழக வனத்துறையின் வன கால்நடை மருத்துவர் கலைவாணன், 10 ஆயிரம் புலிகளில் ஒன்றுதான் வெள்ளைப்புலியாக பிறக்குமென்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறார்.

வைரலாகும் அவலாஞ்சி வெள்ளைப்புலி

நீலகிரி வனக்கோட்டத்துக்குட்பட்ட அவலாஞ்சியில் வெள்ளைப்புலி ஒன்றை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

By admin