• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள்

Byadmin

Sep 6, 2026


திபெத்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Image

படக்குறிப்பு, திபெத்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியுள்ளது.

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம், அதன் எல்லைகளுடன் நின்றுவிடாத ஓர் அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவும் நேபாளமும் இமயமலையில் தோன்றும் ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், நேபாளத்தில் ஏற்படும் வெள்ளத்துக்கும் இந்தியாவில் ஏற்படும் பேரிடர்களுக்கும் இடையேயான தொடர்பு, நீரின் ஓட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எளிமையான கதையை விட மிகவும் சிக்கலானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில வெள்ளங்கள் மலைகளிலிருந்து வேகமாகப் பெருக்கெடுத்து வருகின்றன. அவை அதிக அளவிலான சேறு, பாறைகள் மற்றும் கட்டடக் கழிவுகளையும் அடித்துக் கொண்டு வருகின்றன. மற்ற சில வெள்ளங்கள் சமவெளிகளை அடையும் நேரத்தில் தங்களது வேகத்தை இழந்து, வெறும் வெள்ளநீராக மட்டுமே மாறுகின்றன.

அந்த நீர் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்துமா என்பது நேபாளத்தில் பெய்யும் மழையின் அளவை மட்டுமே சார்ந்தது அல்ல. இந்தியாவில் பெய்யும் மழை, ஆறுகளின் நீர்மட்டம், கரைகள், வடிகால் அமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆகியவையும் அதனைத் தீர்மானிக்கின்றன.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம், இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை, நீர் எல்லையைக் கடந்து தெற்கே பாய்வதால் மட்டுமல்ல. இரு நாடுகளும் மிகப்பெரியதும், தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையற்ற தன்மையைக் கொண்டதுமான இமயமலை நதி அமைப்பைப் பகிர்ந்து கொள்வதாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

By admin