• Wed. Aug 5th, 2026

24×7 Live News

Apdin News

பதக்கங்கள் வெல்வது அரியானா… பயன்பெறுவது குஜராத்.. 2030 காமன்வெல்த் போட்டி குறித்து காங்கிரஸ் எம்.பி கருத்து

Byadmin

Aug 5, 2026


ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடப்பாண்டின் காமென்வெல்த் போட்டிகள் கடந்த ஆஜிஸ்ட் 2 அன்று முடிந்தன. இதில் 39 பதக்கங்களுடன் இந்தியா 4 ஆம் இடம் பிடித்தது.

இந்தியா வென்ற 39 பதக்கங்களில் 10 பதக்கங்களை (13 தங்கங்களில் 7 தங்கம் உட்பட) அரியானா வீரர்கள் பெற்று தந்தனர்.

இதனிடையே, 2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளன.

போராட்டம்

இந்நிலையில் இந்திய விளையாட்டுத் துறையில் அதிக பங்களிக்கும் அரியானாவில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று பாராளுமன்ற வளாகத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி தீபேந்தர் சிங் ஹூடாவுடன், அரியானாவை சேர்ந்த பிற காங்கிரஸ் எம்பிக்களான ஜெய் பிரகாஷ், வருண் முல்லானா, சத்பால் பிரம்மச்சாரி மற்றும் கர்மபீர் பௌத் ஆகியோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

பதக்கங்களை அரியானா தருகிறது, ஆனால் போட்டிகளை நடத்த குஜராத் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று தீபேந்திர சிங் ஹூடா குற்றம்சாட்டினார்.

By admin