• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

பாலாஜி: நாகர்கோவிலைத் தொடர்ந்து புழல் சிறைக்கைதி மரணம் – இன்சுலின் மறுப்பு காரணமா? என்ன நடந்தது?

Byadmin

Jul 17, 2026


தடை செய்யப்பட்ட 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு,  ராமாநாத பாலாஜி ஆகியோரை போலிசார் கைது செய்தனர்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட பாலாஜி (இடது)

    • எழுதியவர், ப. சிவசங்கர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சேலையூரைச் சேர்ந்த பாலாஜி, புதன்கிழமை (ஜூலை 15) உயிரிழந்தார்.

சர்க்கரை நோயாளியான பாலாஜிக்கு இன்சுலின் செலுத்திக்கொள்ள அனுமதித்திருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும், சிறையில் மாற்று மாத்திரை வழங்கியதே அவரது மரணத்துக்குக் காரணம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த புழல் சிறைத்துறை நிர்வாகம், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே அவருக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

பாலாஜி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, உயிரிழந்த சிறைக்கைதி பாலாஜி

சிறைச்சாலையில் பாலாஜி உயிரிழப்பு?

தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்த பாலாஜி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த ஜூலை 12ஆம் தேதி 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர்.

By admin