• Fri. Jul 31st, 2026

24×7 Live News

Apdin News

புதுக்கோட்டை: ஆதிதிராவிட மக்களின் வழிபாட்டு உரிமை தொடர்பாக எழுந்த மோதல் – போலீஸ் குவிப்பு

Byadmin

Jul 31, 2026


மண்டகப்படி ஒதுக்குவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மண்டகப்படி ஒதுக்குவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை, வளவம்பட்டி, மூங்கில் அய்யனார் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த 17ஆம் தேதி காப்புக்கட்டி கோயில் திருவிழா தொடங்கியது.

இதில் மண்டகப்படி ஒதுக்குவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்ததால், ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடி ஒன்பதாம் நாள் மண்டகப்படியில் காலை 8.30 மணியில் இருந்து பகல் 1 மணி வரை ஆதிதிராவிட மக்கள் மண்டகப்படி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிமன்ற அனுமதியின்படி 24ஆம் தேதி திருவிழாவில் சாமி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய தரப்பினர், புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் மறியல் செய்தனர்.

இதனால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உற்சவரின் சிலையை எடுத்துச் செல்ல முற்பட, தர்ணா போராட்டம் நடந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலால் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

கிராமத்தில் சாதிய தீண்டாமை இருக்கிறதா?

தங்கள் கிராமத்தில் இன்றளவும், தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகக் கூறுகிறார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த, ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தங்கள் ஊரில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினரும் ஆதி திராவிடர் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பத்தாரும் வசித்து வருவதாகக் கூறினார்.

By admin