• Wed. Jul 29th, 2026

24×7 Live News

Apdin News

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Byadmin

Jul 29, 2026


DGP-க்கு அறிவுறுத்தல்:

பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை தமிழ்நாடு டிஜிபி உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டமிட்ட செயல்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்யுமாறும்,

போக்சோ வழக்குகளில் காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

By admin