சடாரியின் மேல் பகுதியில் உற்று நோக்கினால், அதில் மகாவிஷ்ணுவின் இரு திருவடிகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். கருவறையில் இருக்கும் பெருமாளின் திருவடியை நாம் நேரடியாகத் தொட முடியாது. ஆனால், சடாரி மூலம் அந்த இறைவனின் அருளை நாம் நேரடியாக அனுபவிக்கலாம்.
சடாரியை நம் தலையில் வைப்பது, பகவானின் திருவடிகளை நேரடியாகத் தலையில் ஏற்றிக் கொள்வது போல, ‘இறைவா, நான் உன் அடியேன், உன் திருவடிகளே எனக்கு தஞ்சம் என்று நம்மை முழுமையாக இறைவனிடம் சரணாகதி கொடுப்பதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.