இதுதொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறும்போது, ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் உள்ள 10 ஈரான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன.
ஈரானின் ராணுவக் கண்காணிப்பு உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அமைப்புகள், வான் பாதுகாப்புத் தளங்கள், டிரோன் சேமிப்பு நிலையங்கள் மற்றும் கண்ணிவெடி அமைக்கும் திறன் கொண்ட தளங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.
கிகு கப்பல் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதற்கான வாய்ப்பு ஈரானுக்கு இருந்தும், அதை செய்யாமல் தவிர்த்துவிட்டது என்று தெரிவித்தது.
அமெரிக்காவின் தாக்கு தலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈரான் மீண்டும் இறங்கியது. குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படைத் தளம் மற்றும் பக்ரைனில் உள்ள சல்மான் துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை- டிரோன்கள் வீசப்பட்டன.
அவற்றை தடுக்க வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. இதில் ஏவுகணைகள், டிரோன்கள் இடைமறிக்கப்பட்டன. மேலும் குவைத், பக்ரைனில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதால் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரித்து இருக்கிறது.