• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடி | ஒருவர் கைது

Byadmin

May 28, 2026


போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை ரக்வானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு தயாரிக்கப்பட்ட 8 கிராம் எடையுடைய போலி தங்க மோதிரம் மற்றும் போலி தங்க நகைகளை அடகு வைத்து பெற்றுக்கொண்ட  பற்றுச்சீட்டுகள் சிலவற்றை பொலிஸார் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த போலி தங்க நகைகளை இந்த நபர், நீர்கொழும்பில் உள்ள ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டமை முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதான நபர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவித்துள்ள ரக்வானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

By admin