• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

மகளுக்கு புத்தகம் வாங்க பணம் வேண்டி, 3 கிமீ ஓட்டத்தில் வெறுங்காலுடன் ஓடி முதலிடம் பிடித்த ஒரு தாயின் கதை

Byadmin

Sep 4, 2026


பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் வசிக்கும் 47 வயதான இந்தத் தாயை, ஆகஸ்ட் 29, 2026 அன்று ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் பார்த்தது.

பட மூலாதாரம், Kiran Sakle/BBC

படக்குறிப்பு, ரமாபாய் ரன்வீர்

“என் மூச்சு இருக்கும் வரை என் மகள்களைப் படிக்க வைப்பேன். மூச்சு நின்றுவிட்டால் என்ன நடக்கிறதோ நடக்கட்டும். ஆனால் ஒரு தாயாக எனது கடமையை நிறைவேற்றுவேன்.”

ரமாபாய் ரன்வீர் கூறும் இந்த வார்த்தைகள் வெறும் பேச்சின் வேகம் மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் அவர் எதிர்கொண்ட போராட்டத்தில் இருந்து வந்த உறுதியை வெளிப்படுத்துகின்றன.

பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் வசிக்கும் 47 வயதான இந்தத் தாயை, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் பார்த்தது.

காரணம், அவர் 3 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெறுங்காலுடன் ஓடி வெற்றி பெற்றார். ஆனால், இந்தக் கதை வெறும் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதைப் பற்றியது மட்டுமல்ல. பெண் குழந்தைகளின் கல்விக்காக ஓடிய ஒரு தாயின் கதை இது.

ஆகஸ்ட் 29 அன்று, அம்பாஜோகாயில் ‘அம்ருத் தௌட் மாரத்தான்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமாபாய் ஓட்டப்பயிற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. அவரிடம் விளையாட்டு காலணிகளோ, டிராக்சூட்டோ இல்லை. அவரது ஒரே ஓட்டப்பந்தய உடை சேலையும், சாதாரண செருப்பும்தான்.

By admin