• Sat. Jun 6th, 2026

24×7 Live News

Apdin News

மட்டஞ்சேரி: கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?

Byadmin

Jun 6, 2026


கொச்சி, மட்டஞ்சேரி, யூத நகரம், யூதர்கள்
படக்குறிப்பு, மட்டன்சேரி என்பது கேரளாவின் கொச்சியில் உள்ள ஓர் இடம், இங்கு ஒரு காலத்தில் யூதர்கள் வாழ்ந்தனர்

    • எழுதியவர், மிர்சா ஏபி பெய்க்
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

கேரளாவின் கடலோர நகரமான கொச்சியில், ‘யூத நகரம்’ (Jew Town) என்று அழைக்கப்படும் மட்டஞ்சேரி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது.

புகழ் பெற்ற போர்த்துகீசிய மாலுமியும் ஆய்வாளருமான வாஸ்கோடகாமா 500 ஆண்டுகளுக்கும் முன்பாக வந்து இறங்கிய பகுதி இது.

இந்தியாவில் முதல் ஐரோப்பியக் குடியேற்றம் உருவான இடமும் கொச்சி தான்.

அவரது இறுதி மூச்சு இங்கு தான் பிரிந்தது.

வரலாற்று ரீதியாக, வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பிறகு, போர்த்துக்கீசியர்கள் யூதர்களைக் குறிவைத்ததால், கொச்சின் ராஜா தனது அரண்மனைக்கு அருகிலுள்ள நிலத்தை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

By admin