• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

ராகுல் மத்திய அரசுக்கு முன்வைத்த 5 கோரிக்கைகள் – டெல்லியில் இரவில் நடந்தது என்ன?

Byadmin

Jul 22, 2026


அரசிடம் ராகுல் காந்தியின் 5 கோரிக்கைகள்

பட மூலாதாரம், Reuters/@Cockroachisback

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் முன்பு 5 கோரிக்கைகளை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சத்ரசால் அரங்கத்தில் தடுப்புக் காவலில் இருந்தபோது அவர் அந்த காணொளியை எடுத்துள்ளார், பின்னர் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

பிரதமர் இல்லத்துக்கு வெளியே போராட்டம் நடத்த முடிவெடுத்தது ஏன் என்பது குறித்து அதில் ராகுல் காந்தி விளக்கியுள்ளார்.

சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா உட்பட பலரும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தர் சென்றிருந்தனர்.

ராகுல் காந்தி அந்த காணொளியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை தான் சந்தித்து மானவர்கள் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கோரியதாகவும், அதற்கு அரசின் அனுமதி வேண்டும் என சபாநாயகர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

By admin