மாற்றத்திற்காக துணைநிற்கிறேன் என்றும் வரும்போது மட்டும்தான் நிரந்தரமாக ஒரு நல்ல சமூகத்தை கட்டமைக்க முடியும். அடுத்த ஆறு மாதத்திற்கான இலக்கு நம்மிடத்தில் இருக்கிறது. இம்மாதம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வுக்கான மாதம். அடுத்த மாதம் சுற்றுசூழலுக்கான மாதம்.
50 லட்சம் மரக்கன்றுகள் நம் இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நடவேண்டும். இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை சுத்தப்படுத்த வேண்டும். நதிநீரை சுத்தப்படுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு பற்றியது. அடுத்தது குழந்தைகள் நலன். ஆறு மாதங்களும், ஆறு முக்கிய பிரச்னைகளை கையிலெடுத்து வீ தி லீடர்ஸ் அமைப்பு செயல்படவேண்டும்.
தனிமனிதனாக நீங்கள் செயலபட்டால் நிச்சயம் மாற்றம் நிகழும். மக்கள் தன்னெழுச்சியாக வருவார்கள் என்பதை இன்று பொள்ளாட்சி பார்த்துள்ளது. திருச்செந்தூர் வரும் 26ம் தேதி பார்க்கும். தமிழ்நாட்டின் பல பகுதிகளும் இதைபார்க்கும். நல்லவர்களுக்கான வாய்ப்பையும், மேடையையும் கொடுக்கவே வீ தி லீடர்ஸ் அமைப்பு உள்ளது.
இன்று 19 லட்சம் பேரில் 17% பெண்கள் இருக்கின்றனர். இது நமது முதல் வெற்றி. ஆனால் இது 50ஆக வேண்டும். அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக வெறும் 5% மட்டுமே பெண்கள் இருப்பர். அதுபோல 14% 18 முதல் 25 வயது உடையவர்கள். 26 முதல் 39 வயதுவரை 40% பேர் இருக்கின்றனர். இது ஒரு இளம் அமைப்பு. மொத்தமாக 54% பேர் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்.
இளைஞர்களின் குரல்களை நாம் கேட்கவேண்டும். இவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இவர்கள் 2026-ல் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031-ல் மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத்தான் போகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.