தொடர் நிலநடுக்கம்:
கடந்த சில தினங்களாக நியூசிலாந்து, மெக்சிகோ என அடுத்தடுத்து நிலநடுக்க சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சால்வடாரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன.
நிலநடுக்கத்தால் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் 15.2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
முன்னதாக நியூசிலாந்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3-ஆக பதிவானது. எனினும், நல்வாய்ப்பாக இந்த சம்பவங்களில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.