முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
எம்எல்ஏவாக பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச்சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை. தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற 9 அமைச்சர்களில் 8 பேர் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
அமைச்சர் கீர்த்தனா, அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்க முடியவில்லை.