ஹங்கேரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
விபத்து
போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் போஸ்னியவில் உள்ள புனித தலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள மெஸோகெரெஸ்டெஸ் அருகே உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் நெடுஞ்சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.