• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

19 மாத குழந்தையின் உறுப்பு தானம் – இளம்பெண், 2 குழந்தைகளுக்கு கிடைத்த மறுவாழ்வு

Byadmin

Aug 26, 2026


19 மாத குழந்தையின் உறுப்புகள் தானம் - இளம்பெண், 2 குழந்தைகளுக்கு கிடைத்த மறுவாழ்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 19 மாத குழந்தையின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் இளம் கொடையாளரான இந்த குழந்தையின் சிறுநீரகங்கள் 20களில் இருக்கும் ஒருவருக்கும், இருதயம் மற்றும் நுரையீரல் வேறு இரு குழந்தைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மூளையில் திரவம் சேர்ந்து வந்ததால் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றரை வயது குழந்தை என்பதால், குழந்தை தனக்கு ஏற்பட்ட அசௌகரியங்களையும் அறிகுறிகளையும் பெற்றோர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. குழந்தை ஏனோ சோர்வாக உள்ளது, சாப்பிட முடியவில்லை என்று பெற்றோர்கள் நினைத்திருந்தனர்.

19 மாத குழந்தையின் உறுப்புகள் தானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

சமூகப் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தையின் பெற்றோர், விழுப்புரம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கூட்டிச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

குழந்தைக்கு ஹைட்ரோகெபாலஸ் எனும் நிலை உருவாகியிருந்தது. (ஹைட்ரோகெபாலஸ் என்பது, மூளை மற்றும் முதுகுத் தண்டைப் பாதுகாக்கும் செரிப்ரோஸ்பைனல் திரவம், மூளையின் உள்ளேயுள்ள வென்ட்ரிக்கிள்கள் எனப்படும் காலிப் பகுதிகளில் அசாதாரணமாக அதிக அளவில் தேங்கும் நிலை. இந்தத் திரவச் சேர்க்கை மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்). அப்போது அந்த பெற்றோருக்கு அதன் முழு விவரம் தெரியாது.

By admin