துப்பாக்கி ஏந்திய போலீஸ்
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் விமான நிலைய நுழைவாயில், விமானங்கள் நிறுத்தும் பகுதிகள் என விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து ரோந்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 20-ந் தேதி வரையில் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளி பகுதியில் சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.