• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

Reform UK கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்து இலண்டன் பொலிஸ் விசாரணை

Byadmin

Jul 10, 2026


2024 இங்கிலாந்து பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு வழங்கப்பட்ட சுமார் £500,000 மதிப்பிலான நன்கொடைகள் குறித்து இலண்டன் மெட்ரோபாலிட்டன் பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் முக்கிய நபராக ஃபியோனா காட்ரெல் (Fiona Cottrell) உள்ளார். இவர், முன்னதாக அமெரிக்காவில் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜார்ஜ் காட்ரெல்லின் தாயார் ஆவார். ஜார்ஜ் காட்ரெல், ரிஃபார்ம் யுகே தலைவர் நைஜல் ஃபரேஜின் சமூக ஊடக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான செலவுகளை கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தலா £250,000 வீதம் இரண்டு தவணைகளாக மொத்தம் £500,000 செலுத்தப்பட்டுள்ளது.

முதல் தவணை 2024 மே 9 அன்றும், இரண்டாவது தவணை மே 29 அன்றும் செலுத்தப்பட்டது. இது தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெற்றுள்ளது.

நன்கொடைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக தவறான தகவல்களை வழங்கியது அல்லது உண்மையான நன்கொடையாளரின் அடையாளத்தை மறைத்தது போன்ற சட்டமீறல்கள் குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விசாரணை முறைப்படி தொடங்கப்பட்டது. அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல்கள் சட்டம் 2000இன் கீழ் (Political Parties, Elections and Referendums Act 2000) இந்த விசாரணை நடைபெறுகிறது. இதுவரை இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள போதிலும், யாரும் கைது செய்யப்படவில்லை.

ஜார்ஜ் காட்ரெல்லின் வழக்கறிஞர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். நைஜல் ஃபரேஜும் தன் தரப்பில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல், தங்கள் கட்சி அதிகாரிகள் யாரும் இதுவரை பொலிஸாரால் விசாரிக்கப்படவில்லை என்று ரிஃபார்ம் யுகே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

By admin