• Wed. May 20th, 2026

24×7 Live News

Apdin News

Transfer | த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் உள்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்

Byadmin

May 20, 2026


தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் மணிவண்ணன் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தவர் ஆவார்.

காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது அங்கு பணிபுரிந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin