• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவின் 2 நகரங்கள், ஆஸ்திரேலியாவின் ஒரு கிராமத்திற்கு இந்தியாவின் ‘கோல்கொண்டா’ பெயர் ஏன்?

Byadmin

Sep 11, 2026


கோல்கொண்டா: தெலங்கானா நகருக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுடன் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோல்கொண்டா.

இந்தப் பெயரைக் கேட்டவுடன், நினைவுக்கு வருவது ஹைதராபாத்தில் உள்ள பிரமாண்டமான கோட்டை மட்டுமல்ல, அதை ஆட்சி செய்த நவாப்களும் தான்.

வரலாற்றில் இடம்பெற்றுள்ள கோல்கொண்டா பேரரசை குதுப் ஷாகிகளும், ஆசஃப் ஜாஹிகளும் ஆட்சி செய்தனர்.

ஆனால், கோல்கொண்டா என்றால் கோட்டை என்று பொருள்படும் நிலையில், அதன் ஆட்சியாளர்களால் மட்டுமல்ல, வைரங்களுக்காகவும் கோல்கொண்டா புகழ்பெற்றிருந்தது என்பது நினைவுக்கு வருகிறது.

கோல்கொண்டா பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததும், தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மற்றும் என்.டி.ஆர் மாவட்டங்களில் அமைந்துள்ளதுமான கொல்லூர் மற்றும் பரிதாலா பகுதிகள் முக்கியமான வைரச் சுரங்கங்களாக இருந்தன. இவை தவிர, வேறு பல சுரங்கங்களும் இருந்தன.

By admin