• Tue. Aug 11th, 2026

24×7 Live News

Apdin News

அயோத்தி ‘காணிக்கை திருட்டு’ போல திருப்பதி, சபரிமலையில் முன்பு நடந்தது என்ன?

Byadmin

Aug 11, 2026


பரகாமணி திருட்டு வழக்கு, அந்த அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பரகாமணி திருட்டு வழக்கு, அந்த அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கோவில்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் திருடப்படுவதைத் தடுக்க, எத்தகைய நிர்வாக முறையை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்வி சற்று வித்தியாசமாகத் தோன்றலாம்.

ஆனால், அயோத்தி ராமர் கோவிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மத வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

இதனுடன், கோவில்களின் நிர்வாகம் அறக்கட்டளைகள், தனிநபர்கள் அல்லது அரசாங்கங்களின் கைகளில் இருப்பது சிறந்ததா? அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல தலைமைச் செயல் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் கோவில்கள் நிர்வகிக்கப்படுவது பொருத்தமானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மதத் தலங்களில் காணிக்கைகளைத் திருடுபவர்கள் கையாளும் நூதனமான வழிமுறைகள், பக்தர்களின் நம்பிக்கையைப் பெரிதும் பாதித்து வருகின்றன. அதனால்தான் இத்தகைய கேள்விகள் அனைத்தும் எழுகின்றன.

காணிக்கைகள் திருடப்படுவது தொடர்பான சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. ராமர் கோவிலுக்கு முன்பாகவே, நாட்டின் பணக்காரக் கோவிலான திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலும், சபரிமலை கோவிலும் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு விதிவிலக்காக இருந்ததில்லை.

By admin