இந்திய அணி திட்டவட்டம்:
இதைத் தொடர்ந்து இலங்கையை வென்ற இந்திய அணி, ஆசிய மகளிர் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்தது. இந்திய ஆடவர் அணியிடம் ஆசிய கோப்பையை ஒப்படைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மறுத்த ஓராண்டுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான தனது இறுதி வெற்றியை இந்தியா உறுதி செய்துகொண்டிருந்தபோது, ஆட்டத்தின் பிற்பகுதியில் மொஹ்சின் நக்வி பிரமுகர்களுடன் அமர்ந்திருந்ததை கேமராக்கள் பதிவு செய்தன. ஆட்டம் முடிந்து இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, அவர் பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் தேவாஜித் சைகியா மற்றும் பிறருக்கு அருகில் அமர்ந்திருப்பது காணப்பட்டது.
மேடையில் இருந்த நக்வி, இரண்டாம் இடத்திற்கான காசோலையை இலங்கை கேப்டன் சமரி அட்டப்பட்டுவிடம் வழங்கினார். அட்டப்பட்டு, ஃபார்வெஸ் மஹரூஃபுடன் பேசிய உடனேயே, பரிசளிப்பு விழா முடிவுக்கு வந்தது.