• Wed. Jul 8th, 2026

24×7 Live News

Apdin News

இன்ஸ்டாகிராம் நண்பனை சந்திக்க சென்ற சிறுமிக்கு 4 நாட்கள் நேர்ந்த கொடுமை – 18 பேர் கைது

Byadmin

Jul 8, 2026


காவல்துறையினரின் தகவலின்படி, அந்தச் சிறுமி பல்வேறு இடங்களில் நான்கு நாட்களுக்குப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Mohar Singh

படக்குறிப்பு, இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்களிடையே பெரும் கோபம் நிலவுகிறது.

    • எழுதியவர், மோஹர் சிங் மீனா
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினரின் தகவலின்படி, அந்தச் சிறுமி பல்வேறு இடங்களில் நான்கு நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீகங்காநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கர் பிபிசியிடம் தொலைபேசி வாயிலாகப் பேசுகையில், “இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாங்கள் 18 பேரைக் கைது செய்துள்ளோம்” என்று கூறினார்.

By admin