இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்ா 8 ரன்களில் வெளியேறினார்.