சதி முயற்சி அறிகுறி இல்லை:
“அவரது பையில் கற்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையின் போது, அவர் ஒரு நாய் மீது கற்களை எறிந்ததாக ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கூறினார். முன்னதாக கடந்து சென்ற ஒரு சரக்கு ரெயில் மீதும் அவர் கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது,” என்று சோனி தெரிவித்தார்.
அந்த நபர் “சற்று மனநிலை சரியில்லாதவராக” தோன்றியதாக கூறிய அவர், இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு திட்டமிட்ட அல்லது சதி முயற்சி இருந்ததற்கான அறிகுறியும் இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.