• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

எபோலா பரவல் உலகளாவிய சுகாதார நெருக்கடி: 88 பேர் உயிரிழப்பு, 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Byadmin

May 18, 2026


காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்டுள்ள எபோலா பரவலை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா பரவல் காரணமாக 88 பேர் உயிரிழற்தள்ளனர்.

300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எந்தளவுக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது என்பது தெரியவில்லை என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பரவலில், அரிதான Bundibugyo வகை எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை.

அதனால் பாதிக்கப்பட்டோர் மரணமடையும் விகிதம் 50 சதவீதத்தை எட்டலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இபோலாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை காங்கோ குடியரசு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

By admin