• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

ஏகே-47 இந்தியாவுக்கு வந்தது எப்படி? வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கை முதல் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது?

Byadmin

Jul 30, 2026


ஏகே-47 இந்தியாவுக்கு வந்தது எப்படி? வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கை முதல் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழைய ரஷ்ய கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் நிற்கும் இராக் காவல்துறை அதிகாரி

    • எழுதியவர், சந்தன் குமார் ஜாஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கலாஷ்னிகோவ் தாக்குதல் துப்பாக்கியான ஏகே-47, உலகின் மிகவும் பிரபலமான ஆயுதங்களில் ஒன்று.

இது ஒப்பீட்டளவில் குறைந்த விலையும், எளிதில் தயாரிக்கக் கூடியதும், பராமரிக்கக் கூடியதும் ஆகும்.

இதன் காரணமாகவே, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஆயுத குழுக்களாலும், பல நாடுகளின் ராணுவங்களாலும் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் 10 கோடிக்கும் அதிகமான கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

பிகாரின் சிவான் மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்குப் பிறகு, இந்தத் துப்பாக்கி தற்போது செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

By admin