• Thu. Aug 13th, 2026

24×7 Live News

Apdin News

கஞ்சா விற்பனை பற்றி கூறியதால் கோவை கல்லூரி மாணவர் கொல்லப்பட்டாரா? 6 மாணவர்கள் கைது

Byadmin

Aug 13, 2026


போதைப் பொருள் பயன்பாடு, மாணவர் கொலை, கோவை

பட மூலாதாரம், Police

படக்குறிப்பு, கல்லூரி மாணவர் அமுதன்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அதே கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கஞ்சா பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகிகள் கேட்டதன்பேரில் தகவல் கொடுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக மாணவனின் தந்தை கென்னடி ஊடகங்களில் பேசியுள்ளார். இதே கருத்தை அவருடைய உறவினரும் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழு மோதல்தான் இந்த கொலைக்குக் காரணமென்று மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி பிபிசியிடம் தெரிவித்தார்.

போதைப்பொருள் பற்றி தகவல் சொன்னதால் மகன் கொல்லப்பட்டதாக தந்தை குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கென்னடி–சுமதி தம்பதியரின் இரண்டாவது மகன் அமுதன் (வயது 19) கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து கல்லூரி நிர்வாகத்தால் சமீபத்தில் வெளியேற்றப்பட்டு வெளியில் தங்கியிருந்த அவர், கடந்த 10-ஆம் தேதியன்று சக மாணவர்கள் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

By admin