கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய ஜூடோ வீரர்கள் ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், இந்த வெற்றிகள் இந்தியாவில் ஜூடோவின் பிரபலத்தை அதிகரிக்க உதவும் என்றும் கூறினார்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ஸ் வஸா-அரி (10-0) என்ற கணக்கில் வீழ்த்தி ஹர்ஷ் சிங் ஆடவர் 60 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.
அதே சமயம், அஸ்மிதா தனது நிதானமான மற்றும் உறுதியான ஆட்டத்தின் மூலம் கனடாவின் ஹைடி குவாச்-ஐ யூகோ (2-1) என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
எக்ஸ் தள பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்பையும் சிறப்பான செயல்திறனையும் பாராட்டி, எதிர்கால முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்தினார்.