• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது?

Byadmin

Aug 22, 2026


காணொளிக் குறிப்பு,

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள பார்லிமெண்ட் ஸ்டீரீட் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி இது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்த காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 14-ம் தேதி ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது பெல்லட் குண்டு மூலம் காயமடைந்ததாக கூறப்படும் சாஹில் லோச்சாவ் தனது வழக்கறிஞர்களுடன் டெல்லி காவல்துறையிடம் சென்று எழுத்துப்பூர்வமான புகார் அளித்தும் காவல்துறை விசாரணை அதிகாரியின் எண்ணை வழங்க மறுத்ததாகவும் புகார் பெறப்பட்டதற்கான எந்த ஒப்புகை ஆவணமும் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, இன்று பெல்லட் குண்டு தாக்குதலில் காயமடைந்ததாக சாஹில் லோச்சாவ் மற்றும் அவரது தாயார் உடன் காவலநிலையம் சென்ற ராகுல் காந்தி நேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், “போராட்டத்தில் காவல்துறை அதிக பலத்தை பயன்படுத்தியதா என்பது குறித்து விசாரிக்க உயர்மட்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அமைத்துள்ளது. ராகுல் காந்தி குறிப்பிடும் சம்பவத்தில் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin