சவுதி அரேபியா முதலிடம்:
பெரும்பாலான நாடுகடத்தல்கள் சவுதி அரேபியாவில் நடைபெறுகின்றன. இந்த காலகட்டத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 15,500 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகம் 3,803 பேரை நாடு கடத்தியதன் மூலம் அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
மற்ற வளைகுடா நாடுகள் கணிசமாக குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன: ஓமன் 1,606 பாகிஸ்தானியர்களையும், பஹ்ரைன் 521 பேரையும், கத்தார் 429 பேரையும், குவைத் 97 பேரையும் நாடு கடத்தின. இந்த புள்ளிவிவரங்கள் ஆறு ஜி.சி.சி. நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன.
சட்டவிரோத நுழைவு, விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தல், பிச்சை எடுத்தல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் போலியான அல்லது முறையற்ற ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.