• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி கொள்ளை: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய கும்பல் – பணம் எங்கே?

Byadmin

Sep 7, 2026


கோவை ரூ.1.06 கோடி கொள்ளை, 4 பேர் கைது

தங்க நகைகள் வாங்குவதற்காக கோவை வந்த ஆந்திர மாநில வியாபாரியிடமிருந்து ரூ.1.06 கோடி பணத்தை கொள்ளையடித்த கும்பல் உளுந்தூர்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூன்று பேரை தேடி வருவதாகவும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் விரைவில் மீட்கப்படும் என கோவை காவல் ஆணையர் கண்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தங்களது கடைக்காக கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர்களிடம் இருந்து தங்க நகைகளுக்கான ஆர்டர்களை கொடுத்துள்ளார்

இந்நிலையில் நேற்று நகைகள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துக்கொண்டு ரங்கசாமி கோவைக்கு வந்துள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, ரூ.1.06 கோடியை எடுத்துக்கொண்டு பேருந்தில் வந்த அவர் லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே இறங்கி, அங்கிருந்து கோவையில் உள்ள நகை தயாரிப்பாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் கோவைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

By admin