• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 3 மாணவர்கள் – இவர்கள் செய்தது என்ன?

Byadmin

Jun 5, 2026


'ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம்' (Onscreen Marking System) அதாவது ஓஎஸ்எம்(OSM) என்பது, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக சிபிஎஸ்இ (CBSE) பயன்படுத்திய ஒரு டிஜிட்டல் மதிப்பீட்டு செயல்முறையாகும்.

பட மூலாதாரம், Mayank Makhija/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இம்முறை, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களைச் சரிபார்க்க திரையில் மதிப்பிடும் முறையை சிபிஎஸ்இ பயன்படுத்தியது, அதில் கடுமையான முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

‘ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம்’ அதாவது ஓஎஸ்எம்(OSM) என்பது, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்காக சிபிஎஸ்இ பயன்படுத்திய ஒரு டிஜிட்டல் மதிப்பீட்டு செயல்முறையாகும். விடைத்தாள்களை விரைவாகவும், குறைந்தபட்ச பிழைகளுடனும் திருத்துவதே இதன் நோக்கம் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது.

இருப்பினும், சிபிஎஸ்இ-யிடம் இருந்து சுமார் 4 லட்சம் மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது விடைத்தாள்களைக் கேட்டபோது, ​​ஓஎஸ்எம் தொடர்பாக சர்ச்சை வெடித்தது.

பல விடைத்தாள்கள் மங்கலாகவோ, வெறுமையாகவோ அல்லது மாற்றப்பட்டோ இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த விவகாரத்தைத் கையில் எடுத்தனர்.

அவர்களில் மூன்று மாணவர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ தலைவரை இடமாற்றம் செய்வது போன்ற முக்கிய நடவடிக்கைகளை கல்வி அமைச்சகம் எடுக்க வேண்டியதாயிற்று.

By admin