• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் கள்ளநோட்டுகள் பறிமுதல்- மலேசிய பெண்ணிடம் போலீஸ் தீவிர விசாரணை

Byadmin

Jul 17, 2026


தஞ்சையை சேர்ந்தவர்

சபீக் ரகுமானிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டு விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (44) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரி யவந்தது. ரவிச்சந்திரனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவோணம் ஆகும். அவர் தற்போது தஞ்சை பிலோ மினா நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கான ஏஜெண்டாக செயல்பட்டு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

வணிக நிறுவனங்கள்

இவர் தஞ்சையில் இருந்து சென்னைக்கு சென்று அங்கு வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கி கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் மலேசியாவில் வேலை பார்த்து உள்ளார். அப்போதுதான் அவருக்கு கள்ளநோட்டு கும்பலோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பெரிய அளவில் அவர் பணமும் சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.

வியாபாரிகள்

மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த பின்னர் தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பில் இருந்தபடியே கள்ள நோட்டுகளை வாங்கி அதனை சத்தம் இல்லாமல் வியாபாரிகளிடம் புழக்கத்தில் விட்டு இருக்கிறார்.

ரவிச்சந்திரன் மூலமாக சபீக் ரகுமானுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்து இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதை தொடர்ந்துதான் ரவிச்சந்திரனும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்.

சென்னையில் இருந்து தஞ்சைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரவிச்சந்திரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் நோட்டுகள் சிக்கி உள்ளன. அந்த பணத்தின் பின்னணி பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

By admin