• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

சென்னை: 1997ல் 300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தவறுதலாக விமானம் தரையிறங்கியது எப்படி?

Byadmin

Jul 5, 2026


தாம்பரம் விமானப் படை தளம், சென்னை விமான நிலையம், சௌதி விமானம் தரையிறக்கம், போயிங் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாம்பரம் விமானப் படை தளம் (கோப்புப் படம்)

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1997-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் தாம்பரம் இந்திய விமானப் படை தளத்திலும் பணியாற்றியவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பிரமாண்ட போயிங் விமானம் ஒன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் உடன் தவறுதலாக தாம்பரம் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது.

சௌதி விமானம் தவறுதலாக தரையிறங்கியதில் விமானியின் தவறு தான் பிரதானமானது என்கிறார், சென்னை விமான நிலையத்தில் ஆபரேஷன் பிரிவில் துணை பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற யுகானந்தம். ஆனால் இதில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) மையத்தின் அதிகாரிகளின் பிழையும் இருக்கிறது என அவர் குறிப்பிடுகிறார்.

விமானம் தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய பிறகு அங்கு நேரில் சென்ற விமான நிலைய அதிகாரிகள் குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.

சென்னை வரலாற்றின் மிகவும் முக்கியமான அத்தியாயங்களில் இதுவும் ஒன்று என்கிறார் எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.

By admin